கோர்ட்டுக்கு வெளியே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை…!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கிடார குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). பட்டதாரியான இவர் பொக்லைன் இயந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் இவருடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தென்காசி நீதிமன்றத்திற்கு சென்று ஊர் திரும்பினார். கிடார குளம் கால்வாய் அருகே பைக்கில் சென்ற போது அடையாளம் தெரியாத 3 நபர்கள் வழிமறித்து அறிவாளால் வெட்ட முயன்றனர்.. பைக்கில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடை ஒன்றில் தஞ்சம் புகுந்த போது உள்ளே புகுந்த நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியதில் மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.