சினிமாவிற்கு குட்பாய் சொல்லும் நயன்தாரா: எதற்காக தெரியுமா?

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைப்பெற்றது.

குறிப்பாக இவர்களுடைய திருமணத்திற்கு பாலிவுட், கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரங்கள் ஷாருக்கான், ரஜினி, கமல் போன்றவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே கோவில் தலங்களுக்குச் சென்று வரும் விக்கி – நயன் சமீபத்தில் மாமியார் வீடான கேரளாவிற்கு சென்று தடபுடல் விருந்து நடந்தது.

இந்த சூழலில் இரண்டாவது தேனிலவை கொண்டாட வெளிநாடு சென்றுள்ளனர். தற்போது நயன்தாரா பற்றி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளனது. அதன் படி, நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்துள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு நடிப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு காரணம் நயன்தாராவின் குடும்பத்தினர் படப்பிடிப்பின் போது தாலியை கழட்ட வேண்டாம் என கூறி உள்ளார்களாம். இதனால் தற்போது நடித்து வரும் படங்களில் அவர் தாலியை கழட்டாமல் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் பல விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு கண்டிப்பாக தாலியை கழட்டி வைப்பதற்கான நிலை ஏற்படும் என்பதால் நடிகை நயன்தாரா நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *