அடுத்த படத்திற்கு ரெடியான சரவணா ஸ்டோர் உரிமையாளர்: எப்போது தெரியுமா?
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் முதல் முறையாக தமிழ் திரையுலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் ‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து சுமார் 100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கியுள்ளனர்.
பான் இந்தியா படமான இப்படம் தமிழ், தெலுங்கி, இந்தி போன்ற மொழிகளில் இருவாகியுள்ளது. இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி நடித்து இருக்கிறார். தி லெஜெண்ட் சரவணன் படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் தி லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து மறைந்த காமெடி நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆனந்த் நடித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ‘தி லெஜெண்ட்’ படமாகது 5 மொழிகளில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஜூலை 28-ம் தேதி வெளியான நிலையில் 10 நாட்கள் மேல் ஆனா நிலையில் இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை மீடியாக்களை சந்தித்து வெளியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு முதல் படத்தில் உள்ள குறைகளை களைந்து அடுத்த படத்தில் மேலும் வெற்றி பெற நினைப்பதாக கூறியுள்ளார்.