விஷம் குடித்து துணை நடிகை திவ்யபாரதி தற்கொலை முயற்சி!!!

திண்டுக்கல் அருகே துணை நடிகை திவ்யபாரதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் யூடியூப் சேனல் நடத்தி வரும் பகலவன் என்பவர் திவ்யபாரதி மீது புகார் அளித்திருந்தார். குறிப்பாக 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அப்புகாரில் தெரிவித்திருந்தார். இதனை துணை நடிகை திவ்யபாரதி மறுப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திவ்யபாரதி புகார் அளித்தார்.

இந்த சூழலில் யூடியூப் சேனல் நடத்தி வரும் பகலவன் என்பவர் தொடர்ந்து திவ்யபாரதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பகலவன் ஆடியோ ஒன்றினை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யபாரதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அனுப்பிய வீடியோவால் துணைநடிகை தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *