தொழில் போட்டி காரணமாக என் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது –  நடிகர் திலீப்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கு தற்போது மீண்டும் பரபரப்புகளை கிளப்பி வருகிறது. இந்த வழக்கில் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் திலீப். 

பலாத்கார வழக்கு : முதல் மனைவி மஞ்சு வாரியர் மீது குற்றம் சாட்டும் திலீப் –  www.patrikai.com

அதில் இந்த வழக்கு மலையாள சினிமாவில் சக்தி வாய்ந்த ஒரு பிரிவினரால் தனிப்பட்ட பழிவாங்கல் எண்ணத்தின் காரணமாகவும் மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் புனையப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  இதில் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கும் கேரளா காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *