17 வயது சிறுமியை கடத்தி  கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது…! 

கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பள்ளி சிறுமியை மிரட்டி கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.பல்லடம் அருகே குடியிருந்து வரும் 17 வயது சிறுமி 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி வீட்டின் அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் சிறுமியை மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி அருகே ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனஎ. 

பின்னர் அந்த சிறுமியை புகைப்படம், வீடியோ எடுத்த அவர்கள் இந்த சம்பவத்தை  வெளியே சொன்னால் புகைப்படத்தை இணைய தளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.இதனிடையே காட்டுப்பகுதியில் இருந்து வீட்டிற்கு தப்பி வந்த சிறுமி தாயிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்  பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை கூட்டு பாலியல்  பலாத்காரம்செய்த பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஜான்சன்(26), மற்றும் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த  பார்த்தீபன்(26) ஆகியோரை போக்சோ பிரிவில் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.ரமேஷ்குமார் மற்றும் பார்த்திபன் ஏற்கனவே ஒரு குற்றச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.மேலும் தலைமறைவான ஒரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *