குட்நைட் கருவிக்குள் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்து, பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு லாட்ஜ் ஒன்றில் கொசு விரட்டும் குட்நைட் கருவிக்குள் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்து தம்பதியை மிரட்டிய வாலிபரை கைது செய்த போலீசார்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தங்குவதற்காக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த தம்பதி ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்தனர் அதன்படி லாட்ஜுக்கு வந்த ஒரு நாள் தங்கி விட்டு திரும்பிச் சென்றனர்

இந்த நிலையில் இந்த லாட்ஜில் பணி புரியும் முனீர் என்ற இளைஞர் லாட்ஜில் தங்கிச்சென்ற தம்பதியிடத்தில் போனில் தொடர்பு கொண்டு நீங்கள் இருவரும் லாட்ஜில் தங்கியிருந்தபோது ரகசிய கேமராவில் வீடியோ எடுத்துள்ளேன் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் வீடியோ காட்சிகளை தந்து விடுவதாக கூறியுள்ளான்

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் சுதாகரித்துக் கொண்டு இதுகுறித்து கோழிக்கோடு திரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி தம்பதியிடத்தில் முதலில் 2000 ரூபாய் பணத்தை கொடுங்கள் தற்போது என்னிடம் பணமாக இதுதான் உள்ளது என்றும் மீதி பணத்திற்கு தங்க நகையாக நேரில் வந்து தருவதாக கூறுங்கள் என்றும் போலீசார் ஆலோசனை வழங்கினார்கள் 

இதே போல லாட்ஜ் ஊழியர் முனீரிடம் தம்பதியினர் பேசியுள்ளனர் அதன்படி தங்க நகைகளை வாங்க வருமாறு கூறி முனீரை வர வைத்தனர் அங்கு காத்திருந்த போலீசார் நகைகளை வாங்க வந்த முனீரை கையும் களவுமாக கைது செய்தனர்

முனீர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரகசிய கேமரா மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் இவர் லார்ஜில் ரூம் எடுத்து தங்கியவர்களின் பலரின் வீடியோக்களை ரகசியமாக எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவர் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது மற்றும் பணம் கேட்டு மிரட்டியது உட்பட இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் முனீர் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த லாட்ஜில் தங்கியவர்கள் மேலும் பலர் புகார் தெரிவிக்க கூடும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது

பலவிதமான ரகசிய கேமராக்கள் வைத்து வீடியோ பதிவு செய்து மிரட்டல் விடும் நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் லாட்ஜ் ஒன்றில் கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் குட் நைட் கருவிக்குள் ரகசிய கேமரா வைத்து தம்பதியை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் கேரளாவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *