மதுவிலக்கு கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் போராட்டம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கழுத்தில் மதுபாட்டில் மாலை அணிந்து உடுக்கை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கள்ள சாராயம் விற்பனை நாளைக்கு நாள் அதிகரித்து வருவதாவும் உயிர் பலிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் மேலும் தமிழக அரசு டாஸ்மாக் மற்றும் மதுவினால் பொதுமக்கள் , மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலை இருந்து வருவதாகவும்
எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கழுத்தில் மதுபாட்டில் மாலை அணிவித்து, உடுக்கை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். இந்தப் போராட்டத்தின் போது உடுக்கை அடித்த நபர் மதுவினால் ஏற்படும் தீமைகள் கூறித்து எடுத்துரைத்தவாறு உடுக்கை அடித்தார்.