இறந்தவர் உடலை எரிக்கும்போது 2பேர் பரிதாப பலி, ஒருவர் கவலைக்கிடம்…!

death

நெய்வேலி அருகே  ரயில் மோதி பிணம் எரிக்கும் கூலி தொழிலாளி இரண்டு பேர் பலி ஒருவர் பலத்த காயம் கடலூர் மாவட்டம் நெய்வேலி  காமராஜ் நகர் பகுதி சேர்ந்த வெங்கடாசலம் முதியவர் உடல்நிலை குறைவால் இறந்துள்ளார் இவருடைய இறுதிச் சடங்கு முடித்து பிரேதத்தை தகனம் செய்வதற்காக வடக்கு சேப்ளாநத்தம்  கிராமம் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர் 

அப்போது வெங்கடாசலம் உடலை தகனம் செய்வதற்காக தெற்கு சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி வயது 55, ஆதிமூலம் வயது 60, அஞ்சாபுலி ஆகிய மூன்று பேரும் பிரேதத்தை எரித்துக்கொண்டு இருந்தனர் அப்போது திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் பேசஞ்சர் ரயில் இவர்கள் மூன்று பேர் மேல் மோதியதில் தங்கசாமி, ஆதிமூலம் சம்பவ இடத்திலேயே பலியானார் அஞ்சாப் புலி பலத்த காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இந்த சம்பவம் குறித்து கடலூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வடக்கு சேப்ளாநத்தம் கிராமத்தில் உள்ள சுடுகாடு ரயில்வே தண்டவாளத்தை தாண்டி தான் செல்ல வேண்டும் அதுவும் ரயில்வே தண்டவாளம் அருகில் சுடுகாடு உள்ளதால் இது போல் சம்பவம் நடைபெறுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *