என் குடும்பமே ஒடஞ்சிபோச்சு – கண்ணீர் விட்டு கதறி அழுத ஆங்கர் மாதேஷ்!
மதன் ரவிச்சந்திரன், வெண்பா மாதேயி ஆகியோர் இணைந்து ஸ்டிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் யூ-டியூப் சேனல்களில் பணியாற்றும் தொகுப்பாளர்கள் குறித்து நடத்திய வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகின.
அந்த வீடியோவில் பிரபலமான பத்திரிகையாளர்கள், யூ-டியூப் சேனல் தொகுப்பாளர்கள், அரசியல் விமர்சகர்கள் ஆகியோர் பாஜகவிற்கு சார்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தரவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதற்காக பாஜகவின் தேர்தல் ஆலோசகர் போல் தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட நபர் ஒருவர், வீடியோவில் உள்ள நபர்களுக்கு பணம், விலையுயர்ந்த பரிசு பொருட்கள், மதுபானங்களை பரிசாக அளிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதில் ஆதன் மீடியாவில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் மாதேஷ் என்பவர் பணம் மற்றும் மதுபான வகைகளை பரிசாக பெறும் காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. போதாக்குறைக்கு மாதேஷை வைத்து விதமாக மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டு ட்விட்டரில் தாறுமாறு வைரலானது. இந்த வீடியோ வெளியான பிறகு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த மாதேஷ் தற்போது முதன் முறையாக கண்ணீர் சிந்தி கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பிசினஸ் மீட்டிங் என அழைத்ததால் சென்றதாக கூறியுள்ள அவர், இப்படியொரு பிரச்சனையில் சிக்குவேன் என தெரியாமல் செய்துவிட்டேன் என மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தான் வெளியிட்ட வீடியோவில் மதன் குடும்பத்தினரை ஒருமையில் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ள மாதேஷ், இந்த பிரச்சனையால் தனது குடும்பத்தினர் அனைவருமே மிகவும் உடைந்துபோயுள்ளதாகவும் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
இதோ அந்த வீடியோ….