நாளுக்கு நாள் உயரும் விலையால்… அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு…!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் வேலூரில் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு. வேலூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து பட்டப்பகலில் பெட்ரோல் திருடும் மர்ம கும்பல். வேலூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில்  சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் டிப்டாப் ஆசாமிகள் கைவரிசை. டிப்-டாப் ஆசாமிகள் பெட்ரோல் திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

வேலூர் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் தியாகராஜபுரம் 2-வது தெருவில் வசித்துவரும் சதானந்தம் என்பவர் தனது வீட்டின் முன்பு இருச்சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். அந்த வழியாக விலை உயர்ந்த மார்டன் பைக்கில் வந்த டிப்டாப் ஆசாமிகள் இருவர், வீட்டின் முன்பு நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பெட்ரோலை நைசாக திருடிச் செல்லும் காட்சி எதிர் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. 

விலை உயர்ந்த பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் பைக்கில் இருந்து இரங்கி நைசாக சென்று பெட்ரோலை திருடுகிறார் மற்றொருவர் நோட்டம் பார்கிறார். பெட்ரோலை திருடியபின்பு சட்டையில் மறைத்துகொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடுகின்றனர். 

விலை உயர்ந்த பைக்கின் நம்பர் சரியாக சிசிடிவியில் பதிவாகாத நிலையில் அவர்கள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *