சுதந்திர தின கொண்டாட்டமானது மக்கள் இயக்கமாக உருவெடுத்து உள்ளது – பிரதமர் மோடி
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை சமூக வலைதளப் பக்கங்களில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தனது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று நாட்டு மக்களிடம் பேசிய போது தேசத்தின் 75-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது சுதந்திர தின கொண்டாட்டமானது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்திருக்கிறது. சுதந்திர தின கொண்டாட்டங்களில் நாட்டின் அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்கின்றனர்.
நமது சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இந்த கொண்டாட்டங்களில் இணைந்துள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும். இதன் ஒரு பகுதியாக வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.
ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்துபவர்கள் தங்களது முகப்புப் படமாக தேசியக் கொடியை வைக்க வேண்டும்.
தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். என பிரதமர் மோடி உரையாற்றினார்.