ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்யா..!! திணறும் உக்ரைன்..!!
உக்ரைன் – ரஷ்யா போர் மூன்று மாதத்திற்கு மேலாக நடைபெறும் நிலையில் இன்னும் போரின் வீரியம் குறையவில்லை. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிற சூழலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ரஷியப் படைகள் டோரிட்ஸ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் நகரில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. கட்டிடத்தில் இருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
மேலும் டோனட்ஸ்க் பகுதியில் உள்ள மைய நகரமான கிராம டோர்ஸ்க்கில் ரஷியப் படை ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கட்டிடங்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.