இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகப்போவதாக அறிவிப்பு..!!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில்  தற்காலிக அதிபராக மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது.  

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். 

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்ற படுவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடி விட்டதாக தகவல் வெளியானது. 

அதை தொடர்ந்து பிரதமர் ரணில் தனிப்பட்ட இல்லத்தை அவர்கள் முற்றுகையிட தொடங்கினர். போராட்டக்காரர்கள் பிரதமருக்கு சொந்தமான வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து வீட்டுக்கு தீ வைத்தனர்.

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவதாக அதிபர் கோத்தபய கூறினார். பிரதமர் ரணில் ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார். ராஜினாமாவை அடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி நடக்கும் எனத் தெரிகிறது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆட்சிக்கு தலைமை தாங்குவார் என  கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *