ஒடிசாவில் பரபரப்பு: உதவிப் பேராசிரியரை செருப்பால் தாக்கிய மனைவி..!
ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் அனில் குமார் என்பவரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவருடைய மனைவி செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ஒடிசா மாநிலத்தில் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின்கடந்த சனிக்கிழமை காலை 11:30 மணி அளவில் உதவிப் பேராசிரியர் அவருடைய அறையில் இருந்த போது, அவருடைய மனைவி திடீரென அறைக்குள் நுழைந்திருக்கிறார்.
அதன் பிறகு தன்னுடைய செருப்பை எடுத்து அவரை தாக்கியிருக்கிறார். அவர் தன்னை தற்காத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.
பல்கலைக்கழகத்தில் கணவனை செருப்பால் அடித்த பெண்இந்தச் சம்பவத்தை அறையின் ஜன்னல் வழியாக யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். உதவிப் பேராசிரியர் கூச்சல் சத்தம் கேட்டு, பல்கலைக்கழக ஊழியர்கள் அங்கு வந்து கதவை திறக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கின்றனர்.
ஆனால் அந்தப் பெண் அவர்களின் சொல்லுக்கு செவி சாய்க்காத காரணத்தினால், உதவிப் பேராசிரியரைக் காப்பாற்ற பாதுகாப்பு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.அதன்பிறகு கதவைத் திறந்து உதவிப் பேராசிரியர் மீட்கப்பட்டார். மேலும், பல்கலைக்கழக ஊழியர்கள் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.