120 அடி ஆழ கிணற்றில் கவிழ்ந்த கார்: 3 பேர் பலி!

நாடு முழுவதும் நேற்றைய தினத்தில் கோலாகமாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டுட்டது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பும் போது 120 அடி ஆழ கிணற்றில் கார் ஒன்று விழுந்ததில் 3 இளைஞர்கள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

கோவை அருகேயுள்ள போளுவாம்பட்டி – தொண்டாமுத்தூர் சாலையில் இன்றைய தினத்தில் சேர்ந்தவர் ரோஷன் என்பவர் . அவரது நண்பர்களான ஆதர்ஷ்(18), ரவி(18), நந்தனன்(18) ஆகியோர் பண்டிகை கொண்டாடுவதற்காக கோவை – சிறுவாணி தனியார் கிளப்புக்கு வந்துள்ளனர்.

பின்னர் ட்டுக்கு செல்வதற்காக நால்வரும் இன்று காலை காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது கோவை அருகேயுள்ள போளுவாம்பட்டி – தொண்டாமுத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடிரென 120 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.

அப்போது காரில் ஓட்டுநர் இருக்கையில் இருந்த ரோஷன் மட்டும் கதவை திறந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அதோடு மற்ற 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

மேலும், ரவியின் சடலம் மீட்கப்பட்டு இருப்பதாகவும், மற்ற 2 பேரின் உடல்களை போலீசார் வலைவீசி தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *