கனமழை எதிரொலி: 3-வது நாளாக தக்காளி விலை அதிகரிப்பு!!

தொடர் மழை மற்றும் வரத்து குறைவால் தமிழகத்தின் பல்வேறு நிலைகளில் தக்காளி விலையானது இருமடங்காக அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் நாள்தோறும் 65 லாரிகளில் இருந்து தக்காளி வருவது வழக்கம். இந்நிலையில் அங்கு பெய்து வரும் கனமழையின் காரணமாக இன்றைய தினத்தில் 40 லாரிகள் மட்டுமே வந்து இறங்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 50 ரூபாய்க்கும், பல இடங்களில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவையில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி மழையின் காரணமாக அழுகி உள்ளது.

அதேபோல் முகூர்த்த தினம் ஓணம் பண்டிகை உள்ளிட்டவைகளால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதேபோல் மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *