பசிக்காக உணவு திருடிய மது…எளியவனிடம் வீரத்தை காட்டிய நபர்கள்…இன்று வெளியான பரபரப்பு தீர்ப்பு.
வெங்கட்ராம்.
நம் பண்பாட்டில் மட்டுமே ஒரு பழக்கம் உண்டு. யார் ஒருவரை நாம் சந்தித்தாலும் சரி அவர் ஏற்கனவே நமக்கு தெரிந்தவராக இருந்தாலும் தெரியாதவராக இருந்தாலும், அவர்களிடம் பேசிய உடன் நாம் கேட்கும் முதல் வார்த்தை சாப்டியா என்கிற வார்த்தை தான். நம்மோடு பேசிக்கொண்டு இருக்கும் ஒருவன் எந்த காரணத்தை கொண்டும் பசியோடு இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் நம் சமூகம். அதுவும் படிப்பறிவிற்கு பெயர் போன கேரளாவில் உணவு தேடி வந்த ஒரு திருடனை அந்த கிராமத்தில் இருந்த சில நபர்கள் அடித்ததே கொன்றிருக்கிறார்கள். நம் கண்ணெதிரே பல கோடி ஊழல் செய்த சில அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் கேள்விகேட்க தைரியம் இல்லாத நாம், சில எளியவர்களிடம் வீரத்தை காட்டிவிடுகிறோம். இந்த வழக்கு நான்கு ஆடுகள் களைத்து இப்போது மதுவை தாக்கிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.