விவசாயிங்களுக்கு ஒரு பாதிப்புன்னா நாங்க பாத்துக்குட்டு சும்மா இருக்க மாட்டோம். அன்புமணி ஆவேசம்..

வெங்கட்ராம்.

சமீப காலமாக ராமதாஸ் அவர்களும் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களும் மக்களின் பிரச்னையை முன்னிறுத்தி பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு கொண்டு இருக்கின்றனர். தந்தை ஒரு பக்கம் கடையின் பெயர் பலகையில் தமிழ் வார்த்தை இல்லை என்றால் கருப்பு மை பூசுவோம் என்று எச்சரிக்கை விட, மகன் தற்போது வேளாண் நிலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் அரசு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த நிலக்கரி சுரங்க அமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களின் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார். அதில், மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்க டெண்டர் விடப்பட்டு இருக்காது.

ஆனால்,தமிழக தொழித்துறை அமைச்சர் எங்களுக்கு தெரியாது என கூறுகிறார். என விமர்சனம் செய்தார். சூழ்ச்சி : அடுத்ததாக, காவிரி டெல்டாவை அளிக்க சூழ்ச்சி நடைபெறுகிறது. மத்திய அரசு டெண்டர் விடும் நடவடிக்கை வரை சென்றுவிட்டது.

ஆனால் தமிழக அரசு இன்னும் அமைதியாக இருக்கிறது. முதல்வர் இன்னும் அமைதியாக இருக்கிறார் என குற்றம் சாட்டினார். தமிழகத்தின் பிரச்சனை : அடுத்ததாக, தமிழகத்தில் 6 புதிய சுரங்களுக்கு அனுமதி தரமாட்டோம் என மாநில அரசு சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது தமிழகத்தின் பிரச்சனை எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *