ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலி..!!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இரண்டு ரஷ்ய தூதர்கள் உள்பட 20 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று காலை விசா பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் இரண்டு ரஷ்ய தூதர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. இதேபோன்று வடமேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.