ரஷ்ய தாய்மார்களுக்கு அதிபர் புதின் அறிவித்த பரிசு தொகை..! எதுக்கு தெரியுமா..?
ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசு தொகை வழங்க போவது ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
இந்த விருது பெறும் தாய்மார்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 13 லட்சம் தொகையை கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையாக அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது இது முதல் முறை அல்ல. ரஷ்யாவில் இதற்கு முன்னர் 1940களில் மக்கள் தொகை பெருக்கத்தை உண்டுபண்ண இந்தத் திட்டம் அமலில் இருந்தது.