இலங்கைக்கு வரும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே..! காரணம் என்ன..!!
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்பட்டதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாட்டில் உணவு, மருந்து பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது அடுத்து இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் இலங்கையில் இருந்து தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ உதவியுடன் தப்பி அண்டை நாடான மாலத்தீவுக்கு சென்றதாகவும், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் சில வாரங்கள் தங்கிய கோத்தபய ராஜபக்சே பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் இலங்கைக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.