அமெரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்து..! 10 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் தீயணைப்பு வீரர் ஒருவர் கண் முன்னே தன்னுடைய 2 குழந்தைகள், மாமனார் உள்ளிட்ட 10 உறவினர்கள் உடல் கருகி உயிரிழந்த கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த துயரமான சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது. நெஸ்கோ பேக் என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு திடீரென ஒரு வீடு முழுவதும் தீ பிடித்தது. வீட்டுக்குள் இருந்தவர்கள் உதவி கேட்டு அபயக் குரல் எழுப்பினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு புகார் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 7 குழந்தைகள் உள்பட 13 பேர்  உயிரிழப்பு | A fire in the United States has left 13 people dead including  seven children ...

தீயணைப்பு வாகனத்தை ஓட்டிவந்த ஹரோல்டு பேக்கர் என்பவர் எரிந்து கொண்டிருப்பது தனது உறவினர் வீடு தான் என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து நின்றார். ஹரோல்டு பேக்கரின் மாமனார் தனது பிள்ளைகளோடு கூட்டு குடும்பமாக வசித்த வீட்டிலேயே தீ பற்றி எரிந்துள்ளது. தீயில் சிக்கி 10 பேர் இறந்துவிட்டனர்.

இதுகுறித்து பேசிய பேக்கர், அவர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. என் மீது விழுந்த மிகப்பெரிய தவறாக நான் பார்க்கிறேன். நான் உள்ளே சென்று அவர்களை காப்பாற்ற முடியவில்லை. நாங்கள் வந்தோம். அவற்றை இழந்தோம். ஆனால் மொத்த வீடும் எரிந்து கொண்டிருந்தது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *