அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி..!! 5 பேர் படுகாயம்..!!
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான நிலையில் 5 பேர் காயமடைந்தனர்.வாஷிங்டனில் வடகிழக்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் உடல் நிலை குறித்த எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் மக்களை பாதுகாப்பதற்காக ஆயுதங்கள் வாங்கும் வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் கூறியிருந்தார்.