பொலிவியாவில் தண்ணீர் சண்டை!

உலக நாடுகள் பலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவில் பல்வேறு நாடுகளில் தண்ணீர் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்ற பிரச்சினை ஒன்று தெற்கு அமெரிக்க நாடான பொலிவியாவில் ஏற்பட்டுள்ளது.

La paz என்ற இடத்தில் விவசாயிகளுக்கும்,படகு இயக்குபவர்களுக்கும் இடையில் ஏரியில் உள்ள நீரை பயன்படுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனையடுத்து, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பலமாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்தபோது படகுகளை இயக்குபவர்கள் கூறியதாவது, ஏரியில் உள்ள நீரை விவசாயத்திற்காக பயன்படுத்தினால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து விடும் இதனால் படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும்.

மேலும், படகுகளை இயக்கவில்லை என்றால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் குறைந்து படகு இயக்குபவர்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்தனர்.

விவசாயிகள் தரப்பிலிருந்து அவர்களது கோரிக்கையையும், குறைகளையும் முன்வைத்தனர்.

மேலும் இரு தரப்பினரும் இந்த தண்ணீர் பிரச்சினையை தீர்த்து தரக்கோரி அரசிடம் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…