சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டேனாம்… அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா? நொந்துக்கொண்ட முதியவர்!

வெறும் 179 ரூபாய் உணவுக்காக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் கட்டும் பரிதாப நிலைக்கு முதியவர் ஒருவர் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த சேர்ந்த ஜான் பாபி என்ற முதியவர் தனது பேரக் குழந்தைகளுடன் லுட்டான் பகுதியில் உள்ள மெக்டோனல்ஸ் கடைக்கு உணவு வாங்க காரில் சென்றுள்ளார். அப்போது அவருடைய பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததால் அந்த முதியவர் காரிலேயே தூங்கியுள்ளார்.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்ததால் விதிமுறைகளை மீறிய முதியவருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.179 க்கு உணவு வாங்க சென்றவருக்கு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *