கர்நாடகாவில் தொடரும் கனமழை..!! கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!!

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தால் உடுப்பி மற்றும் வடக்கு கன்னடா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கபினி அணைகள் நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சில மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சுபர்னிகா, குப்ஜா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது தாழ்வான கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது உள்ளது. கிராமப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிய மக்களை மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டு வருகின்றனர். இதனால் கே.ஆர். எஸ் மற்றும் கபினி அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இரு அணைகளும் முழு கொள்ளளவை நெருங்கி வருகின்றன. இதனால் காவிரி  நதியோர பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *