மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ’ வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும்.
இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு(ஜூன் 12 முதல் 16) வரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியதை ஒட்டி இருக்கும். அடுத்த 24 மணி நேரத்திற்கு(ஜூன் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சோலையாறில் 2 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம், நீலகிரி மாவட்டம் தேவலா, அவலாஞ்சி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கைவங்கக்கடல் பகுதிகள்ஜூன் 12 முதல் 14 வரைவடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., அவ்வபோது 65 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.ஜூன் 12 முதல் 15 வரைதெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்ஜூன் 12 முதல் 16 வரைகேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் அவ்வபோது 65 கி.மீ., வேகத்திலும் வீசலாம். .ஜூன் 12 முதல் 16 வரைஅரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., அவ்வப்போது 60 கி.மீ., வேகத்திலும் வீசும்.மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.