தமிழகத்துக்கு ரெட் அலர்ட்….வானிலை ஆய்வு மையம் தகவல்!
அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறும்பட்சத்தில் அந்த புயலுக்கு TAUKTEA என பெயரிட வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.