அய்யப்பன்தாங்கல் அருகே ரவுடி வெட்டிக்கொலை-6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்

அய்யப்பன்தாங்கல் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், அய்யப்பன்தாங்கல், பெரிய பணிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் அப்பகுதியில் பெரிய ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வினோத் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வினோத்தை வழி மறித்தது. இதனால் அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தவரை விரட்டிச் சென்றுஅவரை கொலை செய்தது. இது குறித்து, தகவல் அறிந்த போரூர் எஸ்ஆர்எம்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *