மாப்பிள்ளை இவர்தான் இவர் போட்டு இருக்கிற சட்ட என்னோடது…இங்க வாங்கிய 300 கோடி பத்தலையோ…..பிரச்சனையை கிளறி விடும் பிரசாந்த் கிஷோர்…

-வெங்கட்ராம்

வட மாநில இளைஞர்கள் எங்கே தாக்கப்படுவது போல் எடுக்கப்பட்ட போலியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இப்போதுதான் கொஞ்சம் அடங்கி இருக்கிறது. அதற்குள் மக்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதற்காக சில ஜந்துக்கள் கிளம்பி இருக்கின்றன. வீடியோ விவகாரம் போலியானது என்று தமிழக அரசும் தமிழ்நாடு காவல்துறையும் தெளிவாக கூறிவிட்டது. வடமாநில இளைஞர்கள் வேலை செய்யும் பல்வேறு இடத்திற்கு நேரடியாகவே சென்று, அவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு இருக்கிறது காவல்துறை. பீகார் அரசால் அமைக்கப்பட்ட குழுவும் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்து விட்டு பிரச்சனை எதுவும் இல்லை அது போலியான வீடியோ தான் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் சிலர் தங்கள் அரசியல் லாபத்திற்காக அதனை பூதாகரமாக மாற்ற முயற்சித்துக் கொண்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில் பிரசாந்த் கிஷோரும் சேர்ந்து விட்டாரோ என்று ஐயம் தோன்றுகிறது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நேற்று பறவைய வீடியோ போலியானது தான். ஆனால் வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது உண்மை’ என்று படையப்பா படத்தில் ரஜினி கூறிய வசனம் போல் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *