தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள்…. நற்சான்றிதழ் வந்துடுச்சு…. அதுவும் யார்கிட்ட இருந்து தெரியுமா..
வெங்கட்ராம்.
தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள், அவர்கள் மிகவும் அன்பானவர்கள் இன்று நம் தமிழ்நாட்டு ஆளுநர் திரு ஆர் .என்.ரவி அவர்கள் மகுடம் சூட்டி உள்ளார். வட மாநில தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாட்டு அரசு உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட பொறுப்பான மற்றும் தரமான கருத்துக்களை தான் ஆளுநரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வடமாநில மக்கள் பலர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக ரயில் ஏறி தங்கள் சொந்த ஊர் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் போலியாக பரவிய அந்த வீடியோவை பார்த்து அதனால் ஏற்பட்ட பயத்தினாலேயே அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர் என்று ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்வேறு விதமான தொலைக்காட்சிகளிலும் பல்வேறு விதமான கருத்துக்களை வட இந்திய மக்களே தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். இந்நேரத்தில் ஆளுநரின் இந்த ட்விட் பதட்டத்தை குறைக்கும் என்று நம்புகிறோம். சனாதானம், ஆங்கிலேயர் ஆட்சி போன்ற பழைய விஷயங்களை மட்டும் பேசிக்கொண்டு இருக்காமல், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஆளுநரின் ஆக்கபூர்வமான கருத்துக்களை மேலும் எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள், அவர்கள் மிகவும் அன்பானவர்கள் இன்று நம் தமிழ்நாட்டு ஆளுநர் திரு ஆர் .என்.ரவி அவர்கள் மகுடம் சூட்டி உள்ளார். வட மாநில தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாட்டு அரசு உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட பொறுப்பான மற்றும் தரமான கருத்துக்களை தான் ஆளுநரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வடமாநில மக்கள் பலர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக ரயில் ஏறி தங்கள் சொந்த ஊர் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் போலியாக பரவிய அந்த வீடியோவை பார்த்து அதனால் ஏற்பட்ட பயத்தினாலேயே அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்கின்றனர் என்று ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல்வேறு விதமான தொலைக்காட்சிகளிலும் பல்வேறு விதமான கருத்துக்களை வட இந்திய மக்களே தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். இந்நேரத்தில் ஆளுநரின் இந்த ட்விட் பதட்டத்தை குறைக்கும் என்று நம்புகிறோம். சனாதானம், ஆங்கிலேயர் ஆட்சி போன்ற பழைய விஷயங்களை மட்டும் பேசிக்கொண்டு இருக்காமல், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஆளுநரின் ஆக்கபூர்வமான கருத்துக்களை மேலும் எதிர்பார்க்கிறோம்.