நான்காவது இடத்தில் தேமுதிக…..ஆனா ஓடுனதே நாலு பேரு தான்…!

வெங்கட்ராம்

கடந்த காலங்களில் பல்வேறு விதமான தோல்விக்கு பிறகு தேமுதிக தற்போது மீண்டும் பேசு பொருளாக உள்ளது. கேப்டன் விஜயகாந்த் என்றால் தைரியம் என்று அவர்களது தொண்டர்கள் எப்போதும் கூறுவார்கள்.

அதை மீண்டும் ஒருமுறை கேப்டன் அவர்கள் நிரூபித்து இருக்கிறார் என்று கூற வேண்டும். தேமுதிக மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள், தொண்டர்கள் சோர்ந்து விட்டார்கள், மக்கள் அந்த கட்சியை எப்போதோ கைவிட்டு விட்டார்கள் என்று பல்வேறு விதமான பேச்சுக்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், பல்வேறு கட்சிகள் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு தேர்தலை புறக்கணித்தோ அல்லது மற்றொரு கட்சிக்கு ஆதரவு அளித்தோ தாங்கள் தப்பித்துக் கொண்டனர்.

ஆனால் தேமுதிகவின் நிலைமை கொஞ்சம் கவலைக்கிடமாக இருக்கு என்று தெரிந்தும், துணிவாக தங்கள் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள். இதன் மூலம் தேமுதிக எதைக் கண்டும் அஞ்சவில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி உள்ளது.

ஆயிரம் பேர் நகையாடினாலும், சிங்கம் என்றுமே சிங்கம் தான். ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ மோதி பார்த்து விடலாம் இன்னும் தேமுதிகவின் துணிவு போக்கு மீண்டும் ஒருமுறை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *