இடைத்தேர்தலில் அமைச்சரை பாட்டு பாடி வரவேற்ற பெண்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பு, வாக்கு சேகரிக்க சென்று அமைச்சர் மெய்யநாதனுக்கு பெண்கள் திலகமிட்டு வரவேற்ற நிலையில் பெண்மணி ஒருவர் முருகன் பாட்டு பாடி வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்னும் பிரச்சாரம் செய்வதற்கு 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் களத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வேட்பாளர்கள் சார்ந்து உள்ள கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் என பலரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 34வது வார்டுக்கு உட்பட்ட O.A ராமசாமி காலனி, வரதராஜன் வீதி, முத்துக்கருப்பன் வீதி, காந்திநகர் காலனி ஆகிய பகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அமைச்சர் மெய்யநாதனுக்கு பெண்கள் திலகமிட்டு வரவேற்ற நிலையில் ஒரு பெண்மணி அமைச்சரை முருகன் பாடல் பாடி வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *