காந்தி ஜெயந்தி! மது கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக ஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் வருகின்ற 2-ம்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் முழுவதுமாக மூடப்படவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
எனவே, அன்றைய தினத்திலும், நபிகள் நாயகம் பிறந்தநாளான வரும் 9ம்தேதியும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) மற்றும் ஆகியவற்றை முழுவதுமாக மூடப்படவேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், அக்டோபர் 2-ம் தேதி காரைக்காலில் மதுக்கடைகளை மூட கலால் துறை அதிகாரி உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.