பாட்டிலில் பெட்ரோலில் விற்க தடை; திருவாரூர் ஆட்சியர் திடீர் உத்தரவு!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் முதலானவற்றை பாட்டில் மற்றும் கேன்களில் கொடுக்கக் கூடாது எனதிருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கோவை, ராமநாதபுரம், ஈரோடு, சத்தியமங்கலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 15 பெட்ரோல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. கடந்து 3 நாட்களாக பாஜக பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசல் முதலியவற்றை பாட்டில் மற்றும் கேன்களில் கொடுக்கக் கூடாது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வாகன ஓட்டிகள் அதுபோல பாட்டில்கள் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் எடுத்து வருகிறார்களா என்று சோதனை சாவடிகள் மூலமாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *