பிரிட்டனின் அடுத்த மாற்றம்..! புதிய பெயருடன் பதவியேற்கிறார் இளவரசர் சார்லஸ்!
1952-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருந்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் ஓய்வு எடுத்துவந்தார். இந்த நிலையில், தனது 96 வயதில் நேற்று காலமானார். இவரின் மரணம் இங்கிலாந்து மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ராணி எலிசபெத்துக்குப் பிறகு அரச பதவியை 73 வயதான அவரின் மூத்த மகன் சார்லஸ் ஏற்கிறார்.
இங்கிலாந்தின் மன்னரான சார்லஸ் சில சடங்குகளைக் கடந்துதான் அரியணையில் ஏற முடியும். அதற்கான சம்பிரதாயங்களில் முதலாவது, அவருக்கான அடைமொழியைத் தேர்வு செய்வது. அதில் சார்லஸ்(Charles), பிலிப் (Philip), ஆர்தர் (Arthur), ஜார்ஜ் (George) என்ற நான்கு பெயர்களில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.