குடிக்க பணம் தராத தாயின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த கொடூர மகன் கைது

விக்கிரவாண்டி அருகே குடிக்க பணம் கேட்டு கொடுக்க மறுத்த தாயாரை குழவி கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த எஸ்.எஸ்.ஆர்.பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்  என்பவரது மனைவி பாஞ்சாலி, (70). இவரது மகன் விஜயகுமார்,(42) டிராக்டர் ஓட்டுநர் இவர் குடித்துவிட்டு அடிக்கடி தன் தாயிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்ததுள்ள்து

இந்நிலையில் இன்று மாலை வீட்டிற்கு வந்த விஜயகுமார் தன் தாயிடம் வழக்கம் போல் குடிக்க பணம் கேட்டு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார் பணம் கொடுக்காததால்  ஆத்திரமடைந்து அங்கிருந்த கட்டையால் தாயை தாக்கி குழவி கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுள்ளார்.

இதில் பாஞ்சாலி தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் அங்கேயே இறந்து போனார். தாய் இறந்ததை அறிந்த விஜயகுமார் அங்கிருந்து தப்பா முயன்ற போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீசார் விஜயகுமாரை கையும் களமாக பிடித்து விக்கிரவாண்டி காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

குடிக்க பணம் கொடுக்காததால் சொந்த தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, கொலை சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *