பிரேசில் தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைக்கு இரண்டு தந்தைகள்..!!

பிரேசிலில் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நேரங்களில் பெண்ணிடம் இரண்டு கரு முட்டைகள் உருவாகி இருந்தால் அவற்றுடன் ஒரு உயிரணு சேர்ந்து இரட்டை குழந்தைகள் உருவாகின்றன.

ஆனால், பிரேசில் அதிசயத்தக்க வகையில் ஒரு கருவில் உருவாகிய இரட்டை குழந்தைகளுக்கு இருவேறு தந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேசிலின் 19 வயது இளம்பெண் தான் இப்படி கருவுற்று இருக்கிறார்.

ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தை.. 2 குழந்தைகளுக்கும் வேறு வேறு தந்தை..  களியாட்டத்தால் வந்த வினை | Brazilian twins shared two different fathers as  doctors say ...

கடந்த ஆண்டு ஒரே நாளில் இரு வேறு ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறார். இதில் கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு 10 மாதங்கள் கழித்து இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இந்த குழந்தைகளின் தந்தை யாராக இருக்கும் என அறிவதற்காக, தான் உறவு கொண்ட ஒருவரை அழைத்து வந்து டிஎன்ஏ சோதனை மேற்கொண்டார். 

இதில் வந்த தகவல்தான் மருத்துவர்களையே தலை சுற்ற வைத்துவிட்டது. ஏனெனில், ஒரு குழந்தைக்கு மட்டுமே பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு நெகட்டிவ் என வந்திருக்கிறது. அதன் பிறகுதான் உடலுறவு வைத்துக் கொண்ட மற்றொரு நபரை தேடிக் கொண்டு வந்து டிஎன்ஏ சோதனை செய்ததில் இன்னொரு குழந்தைக்கு பாசிட்டிவ் என முடிவு வந்தது. 

இந்த விஷயம் குறித்து மருத்துவர் துலியோ ஜார்ஜ் என்பவர் கூறும் போது இதுபோல இரட்டை குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அரிதிலும் அரிதானது என்றாலும், சாத்தியமற்றது கிடையாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *