தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!!

தமிழகத்தில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் படி, கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. அதே போல் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.310-ல் இருந்து ரூ.355-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடைமுறையானது தர்மபுரி, கிருஷ்ணகிரி, தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி, திருச்சி, திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம், மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல் ஆகிய இடங்களிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தகைய விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாதாக தெரிவிக்கின்றனர். வரும் காலங்களில் விலை உயர்வை அரசு குறைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *