வங்கி கொள்ளை! துப்பு கொடுக்கும் மக்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசு!!

சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கி ஒன்றில்நேற்றைய தினத்தில் ஏற்கனவே வேலை பார்த்த முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குறிப்பாக காவலாளிகளுக்கு மயக்க மறுந்து கொடுத்து சுமார் 32 கிலோ தங்க நடைகளை கொள்ளையடித்தார்.

இதன் மதிப்பு சுமார் 20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தின் எதிரொலியாக முருகன் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விடிய விடிய சோதனை நடத்தினர். தற்போது வரையில் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் விடாரணை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே சக்திவேல் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளையனை பிடிக்க உதவும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து உள்ளார்.

மேலும், கொள்ளையனை பிடிக்கும் போலீஸ்சாருக்கும் உதவித்தொகை வழங்கப்படுவதாக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதோடு பொதுமக்களுக்கு சன்மானம் வழங்கும் விதத்தில் இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதாக டிஜிபி தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *