உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற விரும்புகிறேன் – பில்கேட்ஸ்

ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ள அறிக்கையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி முன்னேறியுள்ளனர். இவரது சொத்து மதிப்பு சுமார் 112.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ் தனது சொத்து 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை தனது அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

தற்போது பில்கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அதேபோல் ஆசிய அளவில் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை  அதானி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஃபோர்ப்ஸ் பட்டியலில் எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம், ஜெஃப் பெசோஸ் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இது குறித்து பில்கேட்ஸ் தரப்பில் கூறுகையில் 

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு வழங்க நான் திட்டமிட்டுள்ளேன். உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற விரும்புகிறேன் என கூறுகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *