கப்பலை இரண்டாக்கிய கடல்..!! 27 பேர் மாயம்..! தவிக்கும் ஹாங்காங் மீட்பு குழு..!!
சீனாவின் ஹாங்காங் அருகே கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் கப்பல் கடலில் மூழ்கி 27 பேர் மாயமாகி உள்ளனர். தென்சீன கடல் பகுதியில், மிக கடுமையான சபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்பட்டது.
ஹாங்காங்கில் தென்சீன கடல் பகுதியில் கப்பல் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த கப்பல் பயணம் செய்த போது இரண்டாக உடைந்து நொறுங்கி விழுந்தது.
அந்த கப்பலில் 30 பேர் பயணம் செய்தனர். ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் உள்பட கடல் பகுதியில் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கரமான புயல் தாக்கியது.
இந்த புயல் தாக்கியதில் கப்பல் இரண்டாக நொறுங்கியது. இதனால், கப்பலில் பயணித்த 30 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
மேலும் கப்பலில் பயணித்த 27 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதனால், காணாமல் போன 27 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம், தென் சீனக் கடல் பகுதியில், சபா புயல் காற்று வீசியதால், கப்பல் மூழ்கும் நிலைமை ஆகிவிட்டது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக ஹாங்க் அரசின் விமான மீட்பு குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.