கைவிடப்பட்ட குவாரி: மாவட்ட ஆட்சியர் அதிரடி அய்வு!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அம்மாவட்ட ஆட்சியர் நேற்று மாணவர்களிடம் கலந்துறையாடினார். அப்போது கல்வி என்பது மட்டுமே முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்றும் குறைந்த மதிப்பெண் எடுப்பது தேர்வில் தோல்வி அடைவது போன்ற காரணங்களினால் தற்கொலை முயற்சி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறியுள்ளார்.
இதனிடையே இவற்றை சரி செய்ய கூடிய ஒன்று எனவும் தற்கொலை செய்து கொள்வதால் எந்தவித பயனும் இல்லை எனவும் மாணவர்கள் தவறான முடிவை எடுக்க வேண்டாம் என நேற்று கூறினார். அதன் பின்னர் அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத கல் குவாரிகளை ஆய்வு நடத்தினார். குறிப்பாக வானூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்படுவதால் மழைகாலங்களில் குவாரி நிரம்புவதாகவும், அதோடு இதனை அறியாத மக்கள் குவாரியில் இறங்கி குளிக்கும் போது உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறினார். அந்த பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், ஏற்கனவே வானூரில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேர் குவாரியில் குளிக்க செல்லும் போது உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.