தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3 உறுப்புகள் அகற்றம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வெளிநாட்டிற்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது சினிமா மற்றும் அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே தற்போது அவருக்கு காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வழக்கமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது காலில் ரத்த ஓட்டம் சீராக பாயாமல் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *