நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு.

தொடரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பெட்ரோல் விலை உயர்வால் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து மக்களை நசுக்கி வருகிறது. இன்றைய நிலவரப்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 107.24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 95.97 ஆகவும் உயர்த்தப்பட்டது. மும்பையில், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 113.12 மற்றும் 104.00 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக வரும் நவம்பர் 14 முதல் 29ம் தேதி வரை காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்- ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற நவம்பர் 14 முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். கிட்டத்தட்ட 15 நாட்கள் நடத்தப்படும். இந்த போராட்டத்தில், அந்தந்த பகுதிகளில் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஒரு வாரம் பாதயாத்திரை நடத்தப்படும் என்றார்.