நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்ட ரெம்டெசிவர் விற்பனை!

நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர் முக்கிய மருந்தாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து விற்கப்பட்டு வந்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.

இதனால் மருத்துவனை வளாகத்தில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் இன்று கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மருந்து விற்பனையை அரசு நேரு ஸ்டேடியத்திற்கு இடமாற்றம் செய்துள்ளது.

இதன் மூலம் தேவையற்ற கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *