ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க, ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த இருப்பதாக மத்திய சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விரு தேர்தல்களிலும் மாணவர்கள் பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இதனையடுத்து, இருமுறை தேர்தல் நடத்தப்படும் போது, அதிக ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதால் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது.