விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியரிடம் மனு

காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம்  விவசாயி மனு. காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம்   பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பன் மனு அளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் குளம் பஞ்சாயத்து குட்பட்ட கங்கா குளத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது விவசாயி  அம்மையப்பனை கிராம ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்தார்.

இதனை அடுத்து போலீசார் தங்கபாண்டியன் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,தனிக் குழு அமைத்து அவரின்  ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும், நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும்.

நவம்பர் 1 ல் அதே கிராமத்தில் நடக்க இருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோரி விவசாயி அம்மையப்பன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் விவசாயிகள் சங்கத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *