வைரல்: அதிவேக தனியார் பேருந்தும் டிராக்டரும் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி

தனியார் பேருந்து – டிராக்டரை முந்தும் போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேல உளூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் நேற்று மேல் உளூர் அருகில் பட்டுக்கோட்டை – தஞ்சை பிரதான சாலையில் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற தனியார் பேருந்து  டிராக்டரை முந்தும் போது விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் டிராக்டர் தலைக்கு குப்புற கவிழ்ந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்ததில் காரும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் டிராக்டர் ஒட்டி வந்த அசோக்குமார் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தனியார் பேருந்தில் பயணம் செய்த சில பயணிகளும் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *